‘துள்ளுவதோ இளமை’’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். சினிமாவிற்கு இவர் வந்த புதிதில் இந்த பையனா ஹீரோ, இவரை வைத்து எப்படி படம் எடுப்பது என்று தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தயங்கினர். ஆனால் காலப்போக்கில் இவர் நடித்த காதல்கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக பேசப்படும் நடிகரானார். தனக்கே உரிய இயல்பான நடிப்பில் நடித்து ‘‘ஆடுகளம்’’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். ‘கொலவெறி....’ பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்பட்டு, இந்தியிலும் ராஞ்சனா எனும் படத்தின் மூலம் கால்பதித்து அங்கும் பேசப்படும் நடிகராகிவிட்டார். சினிமாவில் தனுஷின் இன்றைய நிலையே வேறு. இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் தனக்கே உரிய ஸ்டைலில் அவர் அளித்த பேட்டி இதோ...
* எப்போ, இயக்குனராகப் போறீங்க?
திரைக்கதை எல்லாம் ரெடியாகி விட்டது. நேரம் பார்த்து,களத்தில் குதித்து விட வேண்டியது தான். விரைவில்இயக்குனராகி விடுவேன்.
* வெங்கடேஷ் பிரபு என்ற தனுஷ், சினிமாவுக்குவராமல் இருந்திருந்தால்?
எனக்கு நல்லா சமைக்க தெரியும் பாஸ். அதனால, சினிமாபக்கம் வராமல் இருந்திருந்தால், நல்ல சமையல்காரனாஆகியிருப்பேன்.
* உங்கள், மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், அடுத்து எப்போ நடிக்கப்போறீங்க?
அப்படிப்பட்ட ஐடியா எதுவும், இப்போது இல்லை. ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க மாட்டேன்.
* உங்கள் மகன்கள், யாத்ரா,லிங்கா, எப்படி வரணும்னு ஐடியா எதுவும் இருக்கா?
அவங்களுக்கு எப்படி வரணும்னு இஷ்டம் இருகோ, அப்படி வரட்டும். அவர்களின்
விருப்பத்தில் தலையிட மாட்டேன்.
* உங்கள் சகோதரர் செல்வராகவன், ஓய்வு பெறப் போவதாக கூறுகிறாரே?
கண்டிப்பாக, ஓய்வு பெற மாட்டார். தொடர்ந்து, நல்ல படங்களை இயக்குவார்.
* உங்களை எல்லோருக்கும் பிடிச்சுருக்கு? உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்?
கவுண்டமணி அண்ணனின் காமெடி ரொம்ப பிடிக்கும். ஓய்வுகிடைக்கும் போதெல்லாம், அவரது காமெடியை பார்த்து, விழுந்து விழுந்து ரசித்து,சிரிப்பேன்.
Information From Dinamalar