கேரளாவில் பெய்து வரும் கன மழையால் அங்கிருந்து குமுளி வழியாக வரும் பலாப்பழங்களின் விலை சரிவை சந்தித்துள்ளது. குமுளி பேருந்து நிலையத்தில் தற்போது ஒரு முழு பலாப்பழம் 100 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது.
கேரளாவில் இந்த ஆண்டு பலா விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், பலாப்பழங்கள் விரைவில் அழுகி விடுகின்றன. சில பகுதிகளில் பழங்களைப் பறித்து அப்புறப்படுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் மலிவான விலைக்கு பலாப்பழங்கள் விற்கப்பட்டு வருகின்றன.
Information From Puthiyathalaimurai
