இந்தியா ஏ அணியில் ஓடிசா வீரர்: 44 போட்டிகளில் 170 விக்கெட்களை வீழ்த்தியவர்



ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் பசந்த் மொகந்திக்கு இந்திய ஏ அணியில் இடம் கிடைத்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விசாகப்பட்டினத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி விளையாட உள்ளது. இதில் இந்திய ஏ அணியில் இடபெற்றிருக்கும் பசந்த் மொகந்தி இதுவரை 44 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த 1990-ம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய ஒடிசா மாநில வீரர் தேபஷிஸ் மொகந்திக்குப் பிறகு இந்திய அணியில் கால்பதிக்கும் 2-வது வீரர் பசந்த் மொகந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏ அணியில் இடம் பெற்ற பெசந்த் மொகந்திக்கு ஒடிசா கிரிக்கெட் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Information From Puthiyathalaimurai

Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger