அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் டைகர் வுட்ஸ் முதலிடம்


அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடம் வகிக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ இதழ், இந்த ஆண்டு அதிக பணம் சம்பாதித்த வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவர் 2012-ம் ஆண்டு ஜூன் முதல் 2013-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.475 கோடி சம்பாதித்து இருக்கிறார். 2-வது இடத்தில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளார். அவரது வருமானம் ரூ.435 கோடியாகும்.

கிரிக்கெட் வீரர்களில் 2 பேர் மட்டுமே இந்த பட்டியலில் வருகிறார்கள். ஒருவர் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி. 16-வது இடத்தில் உள்ள அவர் ரூ.192 கோடி ஆண்டு வருவாயாக ஈட்டி இருக்கிறார். இதில் ரூ.170 கோடி விளம்பரம் மூலம் வந்த வருமானம் ஆகும். எஞ்சிய ரூ.22 கோடி பரிசுத்தொகை மற்றும் போட்டிக்குரிய ஊதியம் ஆகும்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ரூ.134 கோடியுடன் 51-வது இடம் வகிக்கிறார்.

வீராங்கனைகளில் நிறைய வருவாய் திரட்டும் பட்டியலில் ரஷிய டென்னிஸ் புயல் மரிய ஷரபோவா தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் தொகை ரூ.176 கோடி. இதில் விளம்பரம் மற்றும் இதர வர்த்தகத்தின் மூலம் சேகரித்த ரூ.140 கோடியும் அடங்கும்.

அவருக்கு அடுத்தபடியாக வீராங்கனைகளில் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருடாந்திர வருமானம் ரூ.125 கோடியாக உள்ளது.

Information From Maalaimalar
Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger