நாடு முழுவதும் ஆறுகளில் மணல் அள்ள புதிய கட்டுப்பாடுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.
மணல் கடத்தல் தொடர்பான மனுவை விசாரித்த டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
ஆறுகளில் மணல் முறைகேடாக அள்ளுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இனிமேல், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் எந்தவொரு இடத்திலும் மணல் அள்ள உரிமம் தரக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டனர்.
Information From Puthiyathalaimurai