விளம்பரத்துக்காக படமா? கமல் மறுப்பு


"விஸ்வரூபம், இரண்டாம் பாகத்தின் பெரும்பான்மையான வேலைகளை முடித்து, படத்தை வெளியிட தயாராகி வருகி றார், கமல். அவரிடம், "முதல் பாகம் வெளியாகி, ஒரு சில ஆண்டுகளுக்கு பின் தான், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தானே வழக்கம். நீங்கள், உடனடியாக, இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டீர்களே. விளம்பரத்துக்கா கவா என, கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "விளம்பரத் துக்காக படம் எடுக்கும் ஆள், நானில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுப்பேன். "விஸ்வரூபம் படத்தின் கதையை ரெடி செய்தபோதே, இரண்டு பாகங்களாக தான், ரெடி செய்தேன். முதல் பாகம் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு, அதன் தொடர்ச்சியான, முழு கதையையும் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அதனால் தான், இந்த இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என்கிறார்.

Information From Dinamalar
Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger