ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம்




ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம் அடைந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24–ந்தேதி ஒரு பெண்ணுக்கு இரட்டை தலையுடன் கூடிய அதிசய குழந்தை பிறந்தது. உடலில் 2 தலை, 2 முதுகெலும்பு மற்றும் 2 நரம்பு மண்டலங்கள் இருந்தன.
இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே மூச்சு திணறல் இருந்தது. எனவே குழந்தையை வெண்டி லேட்டரில் வைத்து டாக்டர்கள் பாதுகாத்தனர். இருந்தும் எளிதாக மூச்ச விட முடியாமல் குழந்தை சிரமப்பட்டது.
இந்த நிலையில் பிறந்த 5–வது நாளில் அதாவது கடந்த 29–ந்தேதி மதியம் அக்குழந்தை உயிரிழந்தது. இதற்கிடையே இந்த அதிசய குழந்தையை ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்து சென்றனர்.
பொதுவாக இது போன்று பிறக்கும் குழந்தை 5 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். எனவே, அக்குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடிய வில்லை.
கர்ப்பகாலத்தில் இக்குழந்தையின் தாய் போதிய மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருந்துள்ளார். மேலும், அவர் வசிக்கும் பகுதியில் சோனோ கிராபி பரிசோதனை வசதி இல்லாததால் வயிற்றில் வளர்ந்த போது குழந்தையின் நிலைமை கண்டறிய முடியாமல் போனது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Information From Maalaimalar

Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger